AMAZON SHOP

Sunday, January 30, 2011

STHALA MAGIMAI-5


 சிவ பெருமான் 
  ஸ்தல மகிமை-5

     இருந்தபோதிலும் பீஜாட்சர சக்தியால் மனிதர்களுக்கு கிடைக்கும் பலனை விளக்குவது எளிதானதே.மனித உடலில் உள்ள சூட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதாவது, உல் சூடு, நடுச் சூடு,வெளிசூடு என்று மூன்று விதமான உஷ்ண நிலைகள் ஒவ்வொரு மனித உடல், மன இயக்கத்தைப் பரிபாலனம் செய்கின்றன.


  நாம் ஏற்கும் உணவு,நம்முடன் பழகும் மனிதர்கள் ,நம்மை ஆட்கொள்ளும் என்ன அலைகள் ஆகியவை நம் உடலில் உள்ள அந்தந்த வகை சூட்டுடன் பரிமாற்றம் அல்லது பரிவர்தனை செய்து செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த விதிக்கேற்ப நிகழச்சிகள் நடைபெறும்போது , நமது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு எதிரான பரிவர்தனை அல்லது தொடர்பு ஏற்படும்போது,பலவித நோய்கள் நம் உடலையும்,உள்ளத்தையும் நிச்சயம் தாக்கும்.


   உதாரணமாக,இளநீர் உள்சூடு சக்தியை உடையது. ஆகவே அதிகாலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்தினால், அது நமது உடலில் உள்ள உள்சூட்டுடன் தொடர்பு கொள்வதால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து ,சிறுநீரகங்கள்,மலக்குடல் போன்ற உள்ளுறுப்புகள்  வலிமை பெறுகின்றன. இந்த உறுப்புகளில் உள்ள நரம்புகளும்,இரத்தக் குழாயகளும் தூய்மை அடைகின்றன.


தொடரும் 


    












   










              

Sunday, January 23, 2011

STHALA MAGIMAI-4


 சிவ பெருமான் 
 ஸ்தல மகிமை-4 

    பிரணவ நாதம் 'அ','உ','ம' என்ற மூன்று ஒலிக்கூருகளையும் 1001 பீஜாட்சரக் கூறுகளையும் உடையது.இந்த சகஸ்ர பீஜாட்சரங்களில் மூன்றாவதாக அமைந்த பீஜாட்சர சக்தியே கமணீயம் என்னும் சக்தியாகும்.


   நமது பாரத பூமியில் தேவியின் 51 சக்தி      பீடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு திருக்கோயில்கள் அமைந்திருப்பதுபோலவே பிரணவத்தின் 1001 பீஜாட்சரக் கூருபாடுகளுக்கும் பல சிவலிங்கங்கள் தோன்றி,அனைத்து உயிர்களையும் காத்து வருகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் இலிங்க வித்துக் கூறு வித்தை என்னும் என்னும் சித்தா கிரந்தங்களில் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளன.திருச்சி அருகே உள்ள சிறுகமணி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரிபக்தவத்சலேஸ்வரர்  பிரணவத்தில் பொதிந்திருக்கும் கமணீய சக்திகளை பூவுலகில் நிரவும் அனுகிரக மூர்த்தியாக அமைந்துள்ளது நமக்குக் கிடைத்துள்ள பெரும் பாக்கியமே! 


     கமணீய சக்தி  - ஒரு விளக்கம் 

    கமணீயம் என்னும் பீஜாட்சர சக்தியை மனிதர்களுக்குப் புரியும் விளக்குவது மிகவும் கடினமான செயல்.பீஜாட்சர ரகசியங்களைஎல்லாம் மனித மனம் புரிந்துகொள்வது கடினம் என்பதால்தான் இறைவனின் பரம ஸ்வரூபதையே பல கல்யாண குணங்களாக வர்ணித்து,சகஸ்ர நாமம் என்று ஆயிரம் நாமங்களால் வழிபடும் முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் போன்ற சகஸ்ர நாமத் துதிகளில் இத்தகைய பிரணவக் கூறுபாடுகளே இறைவனின் திருப்பெயர்களாக,இறைப்பரம்போருளின்எல்லைஇல்லா லீலைகளாக, அவதாரக் கிருதியங்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன.


தொடரும் 
    










   











Sunday, January 16, 2011

STHALAMAGIMAI-3



 சிவபெருமான் 
                ஸ்தல மகிமை-3

     உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் மூலமாய் இருப்பது ஓம்காரம் என்னும் பிரணவ நாதமே. இறைவனை வழிபடும் உபாசனா மார்கமான சாக்த உபாசனை, கௌமார உபாசனை போல் ப்ரனவனாததையே ஆதியந்த உபாசனையாகக் கைக்கொள்ளும் மார்க்கமும் மார்க்கமும் உண்டு. ப்ரணவ நாத மார்கத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டும் பல பிரணவத் தலங்கள் உலகெங்கிலும் வியாபித்துள்ளன.


    குறிப்பாக கும்பகோணம் அருகே உள்ள திருஇடைமருதூர் ஓம்காரப் பிரகாரத் தலமாகவும்,திருச்செந்தூர் ஓங்காரப் பிரணவ நாதத் தலமாகவும், செங்கோட்டை அருகே உள்ள திருமலை பிரணவ வாயுத் தலமாகவும்,திருச்சி அருகே உள்ள உய்யகொண்டான் திருமலை உஜஜீவநாதர் திருத்தலம் ப்ரணவ பந்துத் தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகின்றன.ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருத்தலம் ஸ்ரீசக்கரத்தின் மேருவைப்ப்போல பிரணவத்தின் மேருவாக பொலிகின்றது என்பது இதுவரை எங்குமே வெளிவராத தேவ இரகசியமாகும்.


தொடரும்