THERE IS AN ANCIENT SIVAN TEMPLE IN SIRUGAMANI VILLAGE,TIRUCHIRAPALLI.THIS TEMPLE WAS RENOVATED ON SUNDAY 22-8-2010, THIS TEMPLE IS CONSIDERED TO BE A PARIGARASTHALAM.THIS BLOG GIVES SOME INFO ABOUT THIS TEMPLE.
AMAZON SHOP
Labels
- INDIAN TEMPLES (1)
- KUMBAABISHEGAM (1)
- KUMBABISHEKAM VIDEO (1)
- NAMASIVAYA MANDHIRAM (5)
- sirugamani (1)
- STHALA MAGIMAI (21)
- STHALA VARALARU (10)
- VINAYAGAR THUTHI (1)
Sunday, June 5, 2011
Tuesday, May 17, 2011
STHALA MAGIMAI-8

சிவ பெருமான்
STHALA MAGIMAI-8
'எள் நெய்' எனப் போற்றப்படும் நல்லெண்ணெய் தேய்த்து,வாரம் இருமுறை நீராடுவதால் கபால வாயு சீர் பெற்று,நம்முடைய எண்ணங்களில் தெளிவு ஏற்படுகிறது. இக்கரனதாலேயே நம் முன்னோர்கள் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து நீராடுவதலைத் தவறாது செய்து வந்தனர்.(செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும்,புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் நீராடுதல் நன்று)
ஆனால்,மின்சாரம்,மின்காந்த அலைகள் போன்றவை உள்சூடு இயக்கத்தைக் கொண்டிருப்பதால் செல்போன், டிவி,கம்ப்யூட்டர் மின்சாதனங்களை மனிதன் தொடர்ந்து கையாளும்போது அவை மனிதனின் உடல் நரம்புகளை எளிதில் பாழ்படுத்தி விடுகின்றன.அவற்றின் உபயோகத்தால் மூளையில் இயங்கும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடைவதால்,மனித உடலும், உள்ளமும் தங்கள் வலிமையை விரைவில் இழக்கின்றன.
மேலும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடையும்போது தேவையற்ற காம எண்ணங்களும் அதிகரிக்கும். இத்தகைய பிரச்சினைகளால் மனித சமுதாயமும் அவதியுறும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த முன்னோர்கள் இப்பிரரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பல யுகங்களுக்கு முன்பே அருளியுள்ளனர்.
இந்திரன் பெற்ற சாப விமோசனம்
இந்திரன் தேவ லோகத்தின் தலைவன். தேவேந்திரன், விஜயேந்திரன் என்பவை இந்திரனுக்கு விளங்கும் வேறு பெயர்கள்.
தொடரும்
Wednesday, April 20, 2011
STHALA MAGIMAI-7
ஸ்தல மகிமை-7
தற்போது சமுதாயத்தில் விரைந்து பரவி வரும் இத்தகைய சீர்கேடுகளுக்குப் பிராயச்சித்தம் தர வல்லதே கமணீய சக்திகளாகும். சமுதாயத்தில் காமக் குற்றங்களும்,முறைகேடான பழக்க வழக்கங்களும் பெருகா வண்ணம் காக்க உறுதுணை புரிவதே கமணீய நாதக் கூறுகளாகும். எந்த அளவிற்குச் சமுதாயத்தில் கமணீய சக்திகள் பெருகுகின்றதோ, அந்த அளவிற்கு சமுதாயத்தில் காமக் குற்றங்கள் அகன்று,அமைதிப் பூங்காவாக மலரும் என்பதே சித்தர்கள் நமக்குக் காட்டும் நல்வழியாகும்.
மன வளம் பெரும் முறை
ஒரு மனிதனின் எதிர்காலம் அவன் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்துதானே அமைகின்றது? சரியான முடிவுகளை எடுக்கும்போது பிரகாசம் அடையும் அவனுடைய எதிர்காலம் தவறான முடிவுகளால் பாதிக்கப்படுகிறதே? அது ஏன்?
மனித மூளையில் இயங்கும், நடுச்சூடு வகையைச் சார்ந்த கபால வாயுவே ஒரு மனிதன் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றது. நமது உள்ளங்கை,மருதாணி,சந்தனம்,எள் போன்ற மூலிகை வகைகள் நடுச் சூடு இயக்கத்தை கொண்டவை.இதனால் தான் சந்தனம் அரைத்தல், உள்ளங்கையில் மருதாணி இடுதல், எள் நீர் வார்த்து தர்ப்பணம் அளித்தல் போன்ற நற்காரியங்கள் நமது மூளைச் செல்களை ஆக்கப்படுத்தி, நமது எதிர்காலத்தை வளமாக்குகின்றன.
தொடரும்
மனித மூளையில் இயங்கும், நடுச்சூடு வகையைச் சார்ந்த கபால வாயுவே ஒரு மனிதன் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றது. நமது உள்ளங்கை,மருதாணி,சந்தனம்,எள் போன்ற மூலிகை வகைகள் நடுச் சூடு இயக்கத்தை கொண்டவை.இதனால் தான் சந்தனம் அரைத்தல், உள்ளங்கையில் மருதாணி இடுதல், எள் நீர் வார்த்து தர்ப்பணம் அளித்தல் போன்ற நற்காரியங்கள் நமது மூளைச் செல்களை ஆக்கப்படுத்தி, நமது எதிர்காலத்தை வளமாக்குகின்றன.
தொடரும்
Sunday, February 6, 2011
STHALA MAGIMAI-6
![]() |
| சிவ பெருமான் |
ஸ்தல மகிமை-6
ஆனால் ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்ற செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட பானங்களை நாம் ஏற்கும்போது, இந்த பானங்களில் உள்ள 'வெளிச் சூடு' என்னும் தத்துவம் உடலில் உள்ள உள் சூட்டுடன் தொடர்பு கொள்வதால் விரைவில் உடல் உள் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைந்து, இறுதியில் தங்கள் இயக்க சக்தியையே முழுவதுமாக இழந்து விடுகின்றன.
அதேபோல,முறையான திருமணத்திற்குப் பின் தம்பதியரிடையே நிகழும் உறவு நிலையானது.அவர்களை நல்ல ஆரோக்கியமான உடல், மனவள நிலையில் வைத்திருப்பதுடன் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததிகளுக்கும் பரிபூரண ஆரோகியத்தைப் பெற்றுத் தருகிறது.
ஆனால், சுய இன்பம்,ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவு நிலைகளில் மனிதர்கள் ஈடுபடும்போது, இந்த 'உள் சூடு - உள் சூடு' என்ற பரிமாற்றம் நிகழ்வதால், அவ்வாறு தகாத வழிச் செல்வோரின் உடல் உறுப்புகளும், நரம்புகளும், இரத்தக் குழாய்களும் விரைவில் பழுதடைந்துவிடுகின்றன. பல நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
தொடரும்
Subscribe to:
Posts (Atom)
