AMAZON SHOP

Sunday, June 5, 2011

STHALA MAGIMAI-9



 சிவ பெருமான் 
STHALA MAGIMAI-9

     அதாவது 'இந்த்ரிய சுகங்களை' வென்றவன். அல்லது 'இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்ட தேவ நிலையை அடைந்தவன். என்று பொருள்.ஆனால், இந்திரன், பிரம்மா முதலானோர் பல தவறுகளை செய்துவிட்டு, அதனால் பல சாபங்களை பெற்ற சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிட்\ருக்கிறோம்.

     இவைகளெல்லாம் தேவ நிலையில் உள்ளவர்களும் மனிதர்களின்  தவறுகளை  ஏற்றுக்கொண்டு, பல  
 துன்பங்களை மனித உடலில் அனுபவித்து, மனிதச் சமுதாயத்தை கரையேற்ற உதவும் வழிமுறைகளைக் காட்டிய நிலையே, இவற்றில் ஒன்றே இந்திரன் - அகலிகை சாப விமோசன நிகழ்ச்சி.அதை விரிவாக காண்போமா.

     மனிதனுடைய எல்லாவிதமான துன்பங்களுக்கு காரணம் ஆசையே. ஆனால், ஆசையை அறுத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இந்தப் பாடத்தை மானுடர்களுக்கு  புகட்ட எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலே இந்திரன் சாப விமோசன லீலையாகும்.

      ஒரு யுகத்தில் தேவலோக அதிபதியாய் திகழ்ந்த இந்திரன் ஈசனை நோக்கி தவம் இயற்றினான்.அவனுடைய விருப்பம் 'எம்பெருமானைக் காண ஆயிரம் கண்கள் பெறவேண்டும்' என்பதே.பல யுகங்கள் தவத்திற்குப் பின் எம்பெருமானாம் ஈசன் அவன் முன்னே தோன்றி "இந்திரா! எதை நோக்கி இந்தக் கடும் தவத்தை நீ மேற்கொண்டுள்ளாய்? நீ விரும்பும் வரம் என்னவோ?" என்று வினவினார்.

 தொடரும் 





   
    

   
   





    















                        INDIAN TEMPLES AT A GLANCE
                 CLICK HERE

Tuesday, May 17, 2011

STHALA MAGIMAI-8


                           
                                                                  சிவ பெருமான்    

STHALA MAGIMAI-8


          'எள் நெய்' எனப் போற்றப்படும் நல்லெண்ணெய் தேய்த்து,வாரம் இருமுறை நீராடுவதால் கபால வாயு சீர் பெற்று,நம்முடைய எண்ணங்களில் தெளிவு ஏற்படுகிறது. இக்கரனதாலேயே நம் முன்னோர்கள் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து நீராடுவதலைத் தவறாது செய்து வந்தனர்.(செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும்,புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் நீராடுதல் நன்று) 

  ஆனால்,மின்சாரம்,மின்காந்த அலைகள் போன்றவை உள்சூடு இயக்கத்தைக் கொண்டிருப்பதால் செல்போன், டிவி,கம்ப்யூட்டர் மின்சாதனங்களை மனிதன் தொடர்ந்து கையாளும்போது அவை மனிதனின் உடல் நரம்புகளை எளிதில் பாழ்படுத்தி விடுகின்றன.அவற்றின் உபயோகத்தால் மூளையில் இயங்கும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடைவதால்,மனித உடலும், உள்ளமும் தங்கள் வலிமையை விரைவில் இழக்கின்றன.

   மேலும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடையும்போது தேவையற்ற காம எண்ணங்களும் அதிகரிக்கும். இத்தகைய பிரச்சினைகளால் மனித சமுதாயமும் அவதியுறும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த முன்னோர்கள் இப்பிரரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பல யுகங்களுக்கு முன்பே அருளியுள்ளனர்.

    இந்திரன் பெற்ற சாப விமோசனம் 

  இந்திரன் தேவ லோகத்தின் தலைவன். தேவேந்திரன், விஜயேந்திரன் என்பவை இந்திரனுக்கு விளங்கும் வேறு பெயர்கள்.

  தொடரும்
    






   










Wednesday, April 20, 2011

STHALA MAGIMAI-7


  சிவ பெருமான்              
                 ஸ்தல மகிமை-7

        தற்போது சமுதாயத்தில் விரைந்து பரவி வரும் இத்தகைய சீர்கேடுகளுக்குப் பிராயச்சித்தம் தர வல்லதே கமணீய சக்திகளாகும். சமுதாயத்தில் காமக் குற்றங்களும்,முறைகேடான பழக்க வழக்கங்களும் பெருகா வண்ணம் காக்க உறுதுணை புரிவதே கமணீய நாதக் கூறுகளாகும். எந்த அளவிற்குச் சமுதாயத்தில் கமணீய சக்திகள் பெருகுகின்றதோ, அந்த அளவிற்கு சமுதாயத்தில் காமக் குற்றங்கள் அகன்று,அமைதிப் பூங்காவாக மலரும் என்பதே சித்தர்கள் நமக்குக் காட்டும் நல்வழியாகும்.

                 மன வளம் பெரும் முறை 

   ஒரு மனிதனின் எதிர்காலம் அவன் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்துதானே அமைகின்றது? சரியான முடிவுகளை எடுக்கும்போது பிரகாசம் அடையும் அவனுடைய எதிர்காலம் தவறான முடிவுகளால் பாதிக்கப்படுகிறதே? அது ஏன்? 


     மனித மூளையில் இயங்கும், நடுச்சூடு வகையைச் சார்ந்த கபால வாயுவே ஒரு மனிதன் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றது. நமது உள்ளங்கை,மருதாணி,சந்தனம்,எள் போன்ற மூலிகை வகைகள் நடுச் சூடு இயக்கத்தை கொண்டவை.இதனால் தான் சந்தனம் அரைத்தல், உள்ளங்கையில் மருதாணி இடுதல், எள் நீர் வார்த்து தர்ப்பணம் அளித்தல் போன்ற நற்காரியங்கள் நமது மூளைச் செல்களை ஆக்கப்படுத்தி, நமது எதிர்காலத்தை வளமாக்குகின்றன.


தொடரும்