AMAZON SHOP

Tuesday, June 14, 2011

STHALA MAGIMAI-10

  சிவ பெருமான் 
                          STHALA MAGIMAI-10       

         தரிசிக்க தயை புரிவீர்,ஐயா! 

    இந்திரனும்,"பரம்பொருளே! எல்லையில்லா அழகு வாய்ந்த தங்கள் திருஉருவை அடியேனுடைய இரு கண்களால் பார்க்க இயலவில்லை.தங்கள் திருவடியை நோக்கும் அதே சமயம் தங்கள் திருக்கரங்களை காண வேண்டும்.தங்கள் திருக்கரங்களைக் கண்ணுறும் அதே நேரத்தில்,தங்கள் திருமுகத்தைக் காண வேண்டும்" 

      "ஆனால்,தங்கள் திருப்பாதங்களில் இருந்து கண்களை விடுவித்து,தங்கள் முழங்காலிற்கு வருவதற்குள்ளாகவே 300 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன.தங்கள் திருஉந்தியைக காண விழையும்போதோ 600 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன. தங்கள் திருஉந்தியில் பதிந்த நேத்திரங்களை விடுவித்துத் தங்கள் திருமுகத்தைக் காண முயல்வதற்குள், அடியேனின் இந்திரப் பதவிக் காலமே முடிந்து விடும்போல் தோன்றுகிறதே!" 

    "இந்நிலையில் அடியேன் தங்கள் திருஉருவத்தை எப்படி முழுவதுமாக தரிசனம் செய்ய முடியும்? எனவே, தாங்கள் பெருங் கருணை கூர்ந்து, அடியவனுக்கு ஆயிரம் கண்கள் அருளினால், தங்கள் முழு உருவத்தையும் ஒருசேர தரிசிக்கும் பாகியாத்தைப் பெற்றவன் ஆவேன்" என்று மனமுருகி வேண்டினான்.

தொடரும் 


   
















    



















Sunday, June 5, 2011

STHALA MAGIMAI-9



 சிவ பெருமான் 
STHALA MAGIMAI-9

     அதாவது 'இந்த்ரிய சுகங்களை' வென்றவன். அல்லது 'இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்ட தேவ நிலையை அடைந்தவன். என்று பொருள்.ஆனால், இந்திரன், பிரம்மா முதலானோர் பல தவறுகளை செய்துவிட்டு, அதனால் பல சாபங்களை பெற்ற சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிட்\ருக்கிறோம்.

     இவைகளெல்லாம் தேவ நிலையில் உள்ளவர்களும் மனிதர்களின்  தவறுகளை  ஏற்றுக்கொண்டு, பல  
 துன்பங்களை மனித உடலில் அனுபவித்து, மனிதச் சமுதாயத்தை கரையேற்ற உதவும் வழிமுறைகளைக் காட்டிய நிலையே, இவற்றில் ஒன்றே இந்திரன் - அகலிகை சாப விமோசன நிகழ்ச்சி.அதை விரிவாக காண்போமா.

     மனிதனுடைய எல்லாவிதமான துன்பங்களுக்கு காரணம் ஆசையே. ஆனால், ஆசையை அறுத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இந்தப் பாடத்தை மானுடர்களுக்கு  புகட்ட எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலே இந்திரன் சாப விமோசன லீலையாகும்.

      ஒரு யுகத்தில் தேவலோக அதிபதியாய் திகழ்ந்த இந்திரன் ஈசனை நோக்கி தவம் இயற்றினான்.அவனுடைய விருப்பம் 'எம்பெருமானைக் காண ஆயிரம் கண்கள் பெறவேண்டும்' என்பதே.பல யுகங்கள் தவத்திற்குப் பின் எம்பெருமானாம் ஈசன் அவன் முன்னே தோன்றி "இந்திரா! எதை நோக்கி இந்தக் கடும் தவத்தை நீ மேற்கொண்டுள்ளாய்? நீ விரும்பும் வரம் என்னவோ?" என்று வினவினார்.

 தொடரும்