AMAZON SHOP

Tuesday, December 20, 2011

STHALA MAGIMAI-16



                                                             சிறுகமணி லிங்கம் 
                         

              இத்திருத்தலத்தில் இயற்றப்படும் முறையான  வழிபாடுகள் அனைத்தும் ஆயிரம் மடங்காக விருத்தியாகும் என்பதே இறைவன் நமக்கு உணர்விக்கும் பாடமாகும்.ஆனால் பக்தர்கள் அந்த வழிபாட்டுப் பலன்களைத் தம் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தாமல்,மற்றவர்களுக்காக,சமுதாய நலனுக்காகப் பயன்படுத்துவதே சிறப்பு என்பதே இந்திரன் சாப விமோசனம் பெற்ற நிகழ்ச்சி நமக்குப் புகட்டும் பாடமாகும்.


  முறையற்ற காமத்தால் அறிந்தோ,அறியாமலோ தவறு செய்தவர்கள் மனம் திருந்தி,தங்கள் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் பெற உதவும் அற்புதமான திருத்தலம் இதுவே.ஆனால் மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்ற உறுதி பூண்டு வாழ்ந்தால்தான் பிராயச்சித்தம் முழுமை அடையும் என்பதை நினைவில் கொள்ளவும்.


     தற்காலத்தில் செல்போன்,கம்புட்டர்,தொலைகாட்சி போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் பார்வைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, உடல் மற்றும் மன பலவீனம் போன்ற துன்பங்கள் மக்களிடையே பெருகி வருகின்றன. இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வல்லவரே சிறுகமணி ஆயிரம் கண்ணுடைய மூர்த்தி ஆவார்.


தொடரும் 


  

Friday, November 25, 2011

STHALA MAGIMAI-15

                                 
                                                                             சிவ பெருமான்
     இந்திரன் எம்பெருமானைப் பணிந்து வணங்கி,"ஈசனே! அடியார்களின் நேசனே!அறியாமையால் தங்களிடம் ஆயிரம் ஊனக் கண்களை அபசாரம் செய்துவிட்டேன்.ஆனால் தாங்களோ பெரும் கருணை கூர்ந்து, அடியேனுக்கு அகக் கண்ணான ஞானக் கண்ணையே வழங்கி விட்டீர்கள். ஆயிரமாயிரம் ஊனக் கண்களைவிட, ஞானம் புகட்டும் ஒரு அகக் கண்ணே உயர்ந்தது என்ற அற்புதமான பாடத்தை இன்று எனக்குப் புகட்டி விட்டீர்கள். தங்கள் கருணைக்கு எல்லைதான் உண்டோ?" என்று மனம் விட்டுக் கதறி அழுதான்.


  ஆயிரம் கண்ணுடையார்! 

           இந்திரனுக்குச் சாப விமோசனம் அளித்து அவன் கண்களைத் தம் லிங்கத் திருமேனியில் ஏற்றதால்,சித்தர்கள் சிறுகமணி ஈசனை 'சகஸ்ராட்ஷா நாதர்' அதாவது 'ஆயிரம் கண்களை உடையவர்' என்று போற்றுகின்றார்கள்.
இதிருதல இறைவனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உரைவதை இன்றும் பக்தர்கள் தரிசித்து அனுக்ரகம் பெறலாம்.


தொடரும் 


   

Sunday, November 13, 2011

STHALA MAGIMAI-14


சிவ பெருமான்                                                    
                     பரிந்து காத்த பக்தவத்சலன்!


    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் தவறுக்கு உரிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். இறைவனின் தண்டனையிலிருந்து எவருமே தப்ப முடியாது. இது இறைவனே விதித்த விதி. இந்த இயற்கை விதியிலிருந்து எவருக்குமே விலக்கு கிடையாது.இது இறைவனே விதித்த விதி. இந்த இயற்கை விதியிலிருந்து எவருக்குமே விலக்கு கிடையாது. அதனால் இந்திரன் உடலிலிருந்த கண்களையும், கரிய நிறத்தையும் வெண்மணி ஈசனே மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.


    ஓராயிரம் யுகங்கள் முடிவடைந்தவுடன் இந்திரன் பூரணமான சாப விமோசனத்தை பெற்றான்.அவன் உடலிலிருந்த கண்கள் அனைத்தையும் எம்பெருமானே ஏற்றுக்கொண்டார்.இறைவனின் எல்லையில்லாக் கருணையை உணர்ந்த இந்திரன் மனம் உருகி, ஆனந்தக் கண்ணீர் மல்க எம்பெருமானை நோக்கி, "பக்தவத்சலா! பக்தவத்சலா! பக்தவத்சலா! " என்று அழைத்துக் கூத்தாடினான்.அவ்வாறு இந்திரன் தன்னை வேண்டித் துதித்த நாமத்தையே, வெண்மணி ஈசன் அன்று முதல் தமக்குரிய திருப்பெயராய் அன்போடு ஏற்றுக் கொண்டார்.


  'பால்வண்ண நாதர்' எனப் பல யுகங்களாய்த் 
   திகழ்ந்த ஈசன், தற்போது 'பக்தவத்சலேஸ்வரர்'
   என்ற திருநாமம் தாங்கி, தன்னைத் தேடி வந்து 
   பணியும் பக்தர்களுக்குப் பரிவுடனே அருள் பாலிக்கின்றார்.இந்திரனுக்குச் சாப வோமோசனம் தந்த அந்த வெண்மணித் திருத்தலம் காலப்போக்கில் 'சிறுகமணி' எனப் மாறி,திருச்சி அருகே காவிரிக் கரையில் ஒரு சிற்றூராய் இன்று விளங்குகின்றது.


தொடரும் 


    

Wednesday, October 12, 2011

STHALA MAGIMAI-13


 சிவ பெருமான் 
                                                              
                 வெண்மணி வந்தடைந்தானே! 

   தாங்க முடியாத வெட்கமும் வேதனையும் அடைந்த இந்திரன் தக்க பரிகாரம் தேடி பூலோகம் வந்தான். பொன்னி நதி தீரத்தில் வெண்மணி என்ற திருத்தலத்தை அடைந்து,அங்கு குடிகொண்டிருந்த ஈசனைச் சரண் அடைந்தான்.அந்த ஈசனின் திருநாமமோ பால்வண்ண நாதர்,வெண்மணி ஈசன் என்பதாகும்.

    அக்காலத்தில் அதிருக்கொயிலைச் சுற்றி ஆவினங்கள் கூட்டமாக மேயும்.ஸ்ரிசிவபெருமானும் திறந்த வெளியில்தான் வீற்றிரின்தார். பசுக்கள் எல்லாம் அருணோதய வேளையில் வந்து,லிங்கத் திருமேனியில் தாங்களாகவே பாலைச் சொரிந்து விட்டுச் செல்லும். எம்பெருமானின் லிங்க வடிவமும் பால் வண்ண நிறத்தில் வெண்மையாக ஒளிரும். பால் சுரந்த திருமேனியில் காலைக் கதிரவனின் செங்கதிர்கள் பட்டு ஓளிரும் அக்காட்சியோ கயிலாயத்தை நேரில் தரிசிப்பது போல் கண்கொள்ளாக் காட்சியாக ஜொலிக்கும். 

    வெண்மணித் திருத்தலத்தில் இந்திரன் ஆயிரம் யுகங்கள் தொடர்ந்து தவம் இயற்றினான்.ஒவ்வொரு யுக முடிவிலும் அவன் உடலில் இருந்த ஒரு யோனிக் கண்ணை எம்பெருமான் தன்னுடைய லிங்கத் திருமேனியில் ஏற்றுக்கொண்டார். அதனால் அவருடைய உருவமும் சிறிது சிறிதாகக் கரிய நிறமாக மாறத் தொடங்கியது. மாறாக இந்திரன் படிப்படியாகத் தன்னுடைய சுய உருவத்தையும் தேவ ஒளியையும் மீண்டும் பெற ஆரம்பித்தான்.

 தொடரும்