AMAZON SHOP

Wednesday, April 20, 2011

STHALA MAGIMAI-7


  சிவ பெருமான்              
                 ஸ்தல மகிமை-7

        தற்போது சமுதாயத்தில் விரைந்து பரவி வரும் இத்தகைய சீர்கேடுகளுக்குப் பிராயச்சித்தம் தர வல்லதே கமணீய சக்திகளாகும். சமுதாயத்தில் காமக் குற்றங்களும்,முறைகேடான பழக்க வழக்கங்களும் பெருகா வண்ணம் காக்க உறுதுணை புரிவதே கமணீய நாதக் கூறுகளாகும். எந்த அளவிற்குச் சமுதாயத்தில் கமணீய சக்திகள் பெருகுகின்றதோ, அந்த அளவிற்கு சமுதாயத்தில் காமக் குற்றங்கள் அகன்று,அமைதிப் பூங்காவாக மலரும் என்பதே சித்தர்கள் நமக்குக் காட்டும் நல்வழியாகும்.

                 மன வளம் பெரும் முறை 

   ஒரு மனிதனின் எதிர்காலம் அவன் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்துதானே அமைகின்றது? சரியான முடிவுகளை எடுக்கும்போது பிரகாசம் அடையும் அவனுடைய எதிர்காலம் தவறான முடிவுகளால் பாதிக்கப்படுகிறதே? அது ஏன்? 


     மனித மூளையில் இயங்கும், நடுச்சூடு வகையைச் சார்ந்த கபால வாயுவே ஒரு மனிதன் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றது. நமது உள்ளங்கை,மருதாணி,சந்தனம்,எள் போன்ற மூலிகை வகைகள் நடுச் சூடு இயக்கத்தை கொண்டவை.இதனால் தான் சந்தனம் அரைத்தல், உள்ளங்கையில் மருதாணி இடுதல், எள் நீர் வார்த்து தர்ப்பணம் அளித்தல் போன்ற நற்காரியங்கள் நமது மூளைச் செல்களை ஆக்கப்படுத்தி, நமது எதிர்காலத்தை வளமாக்குகின்றன.


தொடரும்