AMAZON SHOP

Tuesday, May 17, 2011

STHALA MAGIMAI-8


                           
                                                                  சிவ பெருமான்    

STHALA MAGIMAI-8


          'எள் நெய்' எனப் போற்றப்படும் நல்லெண்ணெய் தேய்த்து,வாரம் இருமுறை நீராடுவதால் கபால வாயு சீர் பெற்று,நம்முடைய எண்ணங்களில் தெளிவு ஏற்படுகிறது. இக்கரனதாலேயே நம் முன்னோர்கள் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து நீராடுவதலைத் தவறாது செய்து வந்தனர்.(செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும்,புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் நீராடுதல் நன்று) 

  ஆனால்,மின்சாரம்,மின்காந்த அலைகள் போன்றவை உள்சூடு இயக்கத்தைக் கொண்டிருப்பதால் செல்போன், டிவி,கம்ப்யூட்டர் மின்சாதனங்களை மனிதன் தொடர்ந்து கையாளும்போது அவை மனிதனின் உடல் நரம்புகளை எளிதில் பாழ்படுத்தி விடுகின்றன.அவற்றின் உபயோகத்தால் மூளையில் இயங்கும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடைவதால்,மனித உடலும், உள்ளமும் தங்கள் வலிமையை விரைவில் இழக்கின்றன.

   மேலும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடையும்போது தேவையற்ற காம எண்ணங்களும் அதிகரிக்கும். இத்தகைய பிரச்சினைகளால் மனித சமுதாயமும் அவதியுறும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த முன்னோர்கள் இப்பிரரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பல யுகங்களுக்கு முன்பே அருளியுள்ளனர்.

    இந்திரன் பெற்ற சாப விமோசனம் 

  இந்திரன் தேவ லோகத்தின் தலைவன். தேவேந்திரன், விஜயேந்திரன் என்பவை இந்திரனுக்கு விளங்கும் வேறு பெயர்கள்.

  தொடரும்