
சிவ பெருமான்
ஆசையே அழிவிற்கு காரணம்!
எம்பெருமான் மீண்டும் எச்சரிக்கை செய்தார். "இந்திரா! உன்னுடைய தகுதிக்கு மீறிய ஆசையால் விளையப் போகும் விபரீதத்தை உணரும் நிலையில் நீ இல்லை. இருந்தாலும் உன்னுடைய விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுகின்றேன்." என்று அருளி மறைந்தார். இந்திரனும் தான் மேற்கொண்ட தவத்தால் ஒரு பெரிய காரியத்தை சாதித்து விட்ட பெருமிதத்தில் தேவலோகத்தை அடைந்தான்சித்தர்களுடைய கண்ணோட்டத்தில 'இறைவனை தரிசிக்க வேண்டும்' என்று நினைப்பது கூட சுயநலம் கலந்த எண்ணமே. மற்றவர்களுக்கு இறைவனின் தரிசனத்தை பெற்றுத் தரவேண்டும் என நினைப்பதே நியாயமான பொதுநல விருப்பம். எனவே, இந்திரனின் சுயநல ஆசையால் அவன் பெற்ற இறை தரிசனம் 'எது நல்லது? எது கெட்டது?' எனப் பகுத்தறியும் ஆற்றலை அவனுக்கு அளிக்கவில்லை. மாறாக அவனுடைய காம எண்ணத்தை பல மடங்காகப் பெருக்கி விட்டது. புண்ணிய சக்தி எதையும் பன்மடங்கு பெருக்கும் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதானே?
காம நோய் பெருகிய காரணத்தால் இந்திரனுக்கு
கௌதம ரிஷியின் பத்தினியான அகலிகை மீது தீராத மோகம் ஏற்பட்டது. அதனால் அவன் ரிஷியின் சாபத்திற்கு ஆளாக நேரிட்டது. இந்திரன்
பெற்ற வரத்தால் அவன் விருப்பபடியே அவனுக்கு ஆயிரம் கண்கள் இறைவனால் வழங்கப்பட்டன. ஆனால், சுயநலத்தால் இந்திரன் பீடிக்கப்பட்டதால் அகக் கண்களுக்கு பதிலாக ஆயிரம் யோனிக் கண்கள் எம்பெருமானால் அளிக்கப்பட்டன. இந்திரனுடைய உடலும் கரிய நிறமாக மாறி, அவன் தன்னுடைய தேவ ஒளியை இழந்தான்.
தொடரும்
காம நோய் பெருகிய காரணத்தால் இந்திரனுக்கு
கௌதம ரிஷியின் பத்தினியான அகலிகை மீது தீராத மோகம் ஏற்பட்டது. அதனால் அவன் ரிஷியின் சாபத்திற்கு ஆளாக நேரிட்டது. இந்திரன்
பெற்ற வரத்தால் அவன் விருப்பபடியே அவனுக்கு ஆயிரம் கண்கள் இறைவனால் வழங்கப்பட்டன. ஆனால், சுயநலத்தால் இந்திரன் பீடிக்கப்பட்டதால் அகக் கண்களுக்கு பதிலாக ஆயிரம் யோனிக் கண்கள் எம்பெருமானால் அளிக்கப்பட்டன. இந்திரனுடைய உடலும் கரிய நிறமாக மாறி, அவன் தன்னுடைய தேவ ஒளியை இழந்தான்.
தொடரும்