சிறுகமணி லிங்கம்
இத்திருத்தலத்தில் இயற்றப்படும் முறையான வழிபாடுகள் அனைத்தும் ஆயிரம் மடங்காக விருத்தியாகும் என்பதே இறைவன் நமக்கு உணர்விக்கும் பாடமாகும்.ஆனால் பக்தர்கள் அந்த வழிபாட்டுப் பலன்களைத் தம் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தாமல்,மற்றவர்களுக்காக,சமுதாய நலனுக்காகப் பயன்படுத்துவதே சிறப்பு என்பதே இந்திரன் சாப விமோசனம் பெற்ற நிகழ்ச்சி நமக்குப் புகட்டும் பாடமாகும்.
முறையற்ற காமத்தால் அறிந்தோ,அறியாமலோ தவறு செய்தவர்கள் மனம் திருந்தி,தங்கள் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் பெற உதவும் அற்புதமான திருத்தலம் இதுவே.ஆனால் மீண்டும் அத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்ற உறுதி பூண்டு வாழ்ந்தால்தான் பிராயச்சித்தம் முழுமை அடையும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தற்காலத்தில் செல்போன்,கம்புட்டர்,தொலைகாட்சி போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் பார்வைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, உடல் மற்றும் மன பலவீனம் போன்ற துன்பங்கள் மக்களிடையே பெருகி வருகின்றன. இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வல்லவரே சிறுகமணி ஆயிரம் கண்ணுடைய மூர்த்தி ஆவார்.
தொடரும்