AMAZON SHOP

Thursday, June 30, 2011

STHALA MAGIMAI-11

  சிவ பெருமான் 

STHALA MAGIMAI-1


                                  ஆயிரம் கண் போதாதே !

     எம்பெருமான் புன்னகை புரிந்தார். ஏன் தெரியுமா? இந்திரன் கூறியது முற்றிலும் சரியே. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனை முழுமையாக தரிசனம் செய்வது எவராலும் இயலாத காரியம்.தேவர்களும்,யோகிகளும், மகான்களும்,சித்தர்களும் அவர்தம் திரஊருவத்தின் ஒரு அணு அளவு தர்சனத்தையே பெற்றுள்ளனர் என்றால் மற்றவர்களின் நிலையை என்னென்று கூறுவது?

     "இந்திரனே! இறைவனை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்ற உன்னுடைய எண்ணம் நல்ல எண்ணம்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால்,அதற்கான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்று முதலில் சிந்தித்து    பார்" 

        "என் மேனியில் பாதியைப் பெற்ற சக்தியும்,என் வழித் தோன்றல்களான கணபதியும், முருகனுமே என்னை முழுமையாக உணர்ந்து கொண்டது கிடையாது. அவ்வாறிரிருக்க ஒரு தேவ நிலையில் உள்ள நீ என்னை முழுமையாக தர்சிக்க வேண்டும் என்று பேராசை அல்லவா? தகுதிக்கு மீறிய ஆசை கொள்ளலாமா?" என வினவினார் ஈசன் .

    அதற்கு இந்திரனும் "ஐயனே,தங்களால் இயலாத காரியம் என ஒன்று உண்டா என்ன? விதியை விதித்தவரே தாங்கள்தான். தாங்கள் நினைத்தால் அந்த விதியை மாற்றி அமைக்கலாம் அல்லவா?எப்படியாவது அடியேனுடைய இந்தச் சிறிய ஆசையை தாங்கள் நிறைவேற்றியே ஆகா வேண்டும்". என்று மீண்டும் வேண்டினான்.

தொடரும் 

   





























Tuesday, June 14, 2011

STHALA MAGIMAI-10

  சிவ பெருமான் 
                          STHALA MAGIMAI-10       

         தரிசிக்க தயை புரிவீர்,ஐயா! 

    இந்திரனும்,"பரம்பொருளே! எல்லையில்லா அழகு வாய்ந்த தங்கள் திருஉருவை அடியேனுடைய இரு கண்களால் பார்க்க இயலவில்லை.தங்கள் திருவடியை நோக்கும் அதே சமயம் தங்கள் திருக்கரங்களை காண வேண்டும்.தங்கள் திருக்கரங்களைக் கண்ணுறும் அதே நேரத்தில்,தங்கள் திருமுகத்தைக் காண வேண்டும்" 

      "ஆனால்,தங்கள் திருப்பாதங்களில் இருந்து கண்களை விடுவித்து,தங்கள் முழங்காலிற்கு வருவதற்குள்ளாகவே 300 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன.தங்கள் திருஉந்தியைக காண விழையும்போதோ 600 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன. தங்கள் திருஉந்தியில் பதிந்த நேத்திரங்களை விடுவித்துத் தங்கள் திருமுகத்தைக் காண முயல்வதற்குள், அடியேனின் இந்திரப் பதவிக் காலமே முடிந்து விடும்போல் தோன்றுகிறதே!" 

    "இந்நிலையில் அடியேன் தங்கள் திருஉருவத்தை எப்படி முழுவதுமாக தரிசனம் செய்ய முடியும்? எனவே, தாங்கள் பெருங் கருணை கூர்ந்து, அடியவனுக்கு ஆயிரம் கண்கள் அருளினால், தங்கள் முழு உருவத்தையும் ஒருசேர தரிசிக்கும் பாகியாத்தைப் பெற்றவன் ஆவேன்" என்று மனமுருகி வேண்டினான்.

தொடரும்