AMAZON SHOP

Tuesday, June 14, 2011

STHALA MAGIMAI-10

  சிவ பெருமான் 
                          STHALA MAGIMAI-10       

         தரிசிக்க தயை புரிவீர்,ஐயா! 

    இந்திரனும்,"பரம்பொருளே! எல்லையில்லா அழகு வாய்ந்த தங்கள் திருஉருவை அடியேனுடைய இரு கண்களால் பார்க்க இயலவில்லை.தங்கள் திருவடியை நோக்கும் அதே சமயம் தங்கள் திருக்கரங்களை காண வேண்டும்.தங்கள் திருக்கரங்களைக் கண்ணுறும் அதே நேரத்தில்,தங்கள் திருமுகத்தைக் காண வேண்டும்" 

      "ஆனால்,தங்கள் திருப்பாதங்களில் இருந்து கண்களை விடுவித்து,தங்கள் முழங்காலிற்கு வருவதற்குள்ளாகவே 300 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன.தங்கள் திருஉந்தியைக காண விழையும்போதோ 600 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன. தங்கள் திருஉந்தியில் பதிந்த நேத்திரங்களை விடுவித்துத் தங்கள் திருமுகத்தைக் காண முயல்வதற்குள், அடியேனின் இந்திரப் பதவிக் காலமே முடிந்து விடும்போல் தோன்றுகிறதே!" 

    "இந்நிலையில் அடியேன் தங்கள் திருஉருவத்தை எப்படி முழுவதுமாக தரிசனம் செய்ய முடியும்? எனவே, தாங்கள் பெருங் கருணை கூர்ந்து, அடியவனுக்கு ஆயிரம் கண்கள் அருளினால், தங்கள் முழு உருவத்தையும் ஒருசேர தரிசிக்கும் பாகியாத்தைப் பெற்றவன் ஆவேன்" என்று மனமுருகி வேண்டினான்.

தொடரும் 


   
















    



















No comments:

Post a Comment