
சிவ பெருமான்
இந்திரன் எம்பெருமானைப் பணிந்து வணங்கி,"ஈசனே! அடியார்களின் நேசனே!அறியாமையால் தங்களிடம் ஆயிரம் ஊனக் கண்களை அபசாரம் செய்துவிட்டேன்.ஆனால் தாங்களோ பெரும் கருணை கூர்ந்து, அடியேனுக்கு அகக் கண்ணான ஞானக் கண்ணையே வழங்கி விட்டீர்கள். ஆயிரமாயிரம் ஊனக் கண்களைவிட, ஞானம் புகட்டும் ஒரு அகக் கண்ணே உயர்ந்தது என்ற அற்புதமான பாடத்தை இன்று எனக்குப் புகட்டி விட்டீர்கள். தங்கள் கருணைக்கு எல்லைதான் உண்டோ?" என்று மனம் விட்டுக் கதறி அழுதான்.
ஆயிரம் கண்ணுடையார்!
இந்திரனுக்குச் சாப விமோசனம் அளித்து அவன் கண்களைத் தம் லிங்கத் திருமேனியில் ஏற்றதால்,சித்தர்கள் சிறுகமணி ஈசனை 'சகஸ்ராட்ஷா நாதர்' அதாவது 'ஆயிரம் கண்களை உடையவர்' என்று போற்றுகின்றார்கள்.
இதிருதல இறைவனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உரைவதை இன்றும் பக்தர்கள் தரிசித்து அனுக்ரகம் பெறலாம்.
தொடரும்
No comments:
Post a Comment