![]() |
| SIRUGAMANI CAUVERY RIVER BANK |
கங்கையிற் புனிதமாய் காவிரி என்ற காவிரிக்கு
உயர்வளிக்கப்பட்டுள்ளது.
காவேரி,காவிரி என்ற இரு சொற்களும் பொருத்தமான ஒன்றே. கா: பாவநீக்கம். வே:விரும்பியதை தருபவள். ரி:மோட்சமளிப்பவள் சகல பாவங்களையும் நீக்கி விரும்பியதை வழங்கி மோட்சமளிப்பவள் என்று பொருள்படும்.
கா:சோலை,வி:விசை அல்லது சக்தி ரி :பரந்த, விரிந்த, சக்தியுடன் அல்லது விசையுடன் சோலை போல் அழகோடு கூடிய விரிந்து வரும் காவிரி என்பது விளக்கமாகும்.
ஒருவர் தன் பாவங்களை முழுவதும் போக்கிக் கொள்ள கங்கையில் 3 தினங்கள் தங்கி குளிக்க வேண்டும்.
யமுனையிலோ 5 தினங்கள் தங்கி குளிக்க வேண்டும். ஆனால் காவிரி பாயும் தேசத்தில் வசித்தாலே முக்தி. காவிரி கரையில் வசித்தாலோ அதனினினும் சீக்கிரம் முக்தி. காவிரியில் பட்ட காற்றை ஸ்வாசிதலோ கோடானு கோடி புண்ணியம்.
லட்சோப் லட்ச மக்கள் குளித்த காரணத்தால் தன் மீது படிந்துள்ள பாவங்களை போக்கிக் கொள்ள கங்கையானவள் காவேரி ஸ்நானனம் எனும் ஐப்பசி 1 அதிகாலை காவிரியில் வந்து நீராடுவதாக ஐதீகம்
தொடரும்

No comments:
Post a Comment