AMAZON SHOP

Sunday, October 10, 2010

STHALA VARALAARU - 6


     
          
                                       LORD SIVA 
                          

ஸ்தல வரலாறு- 6 
   

        பக்த+வத்சலம்  = பக்தவத்சலம் ஆயிற்று. தன் குழந்தைகளை காப்பது போல் அரவணைத்து காப்பவர் என்று பொருள்.எனவே பக்தவத்சலேஸ்வறரை   தரிசித்தல் என்பது வானளாவிய உயர்ந்த செயலாகும். வார்த்தையில் வர்ணிக்க இயலாத வளங்களை வாரி வாரி வழங்கும் தலம் சிறுகமணி ஆகும். 


    மாலை வேளை நான்கைந்து சிறுவர்கள் சிவன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டிற்கு இடையூறாக சாந்தம் தவழும் சாது ஒருவர் குறிக்கிட்டு ஒரு சிறுவனை நோக்கி தம்பி குடிக்க தண்ணீர் வேண்டுமே? என வினவுகிறார். அச்சிறுவன் பெரியவருக்கு தண்ணீர் கொடுக்கும் பொருட்டு தன் வீடு நோக்கி செல்கிறான். அப்பெரியவரும் உடன் தொடர்கிறார். ஒரு செம்பு தண்ணீருடன் வீட்டின் வெளியே வந்த சிறுவன் வீட்டு வாயிலில் அப்பெரியவரை காண்கிறான். 


 தண்ணீரை அவர்முன் நீட்ட பெரியவர் பெற்றுக் கொள்கிறார். நீரை பெற்ற பெரியவர் தரையில் அத்தண்ணீரை ஊற்றுகிறார். மண்ணைக் குழைக்கிறார். இருகவளம் வாயில் போட்டு விழுங்கி நீரை பருகுகிறார். செம்பை அச்சிறுவன் கையில் கொடுத்துவிட்டு வந்த வழியே சென்று மறைந்து விடுகிறார்.


தொடரும் 
   
   












     













No comments:

Post a Comment