நவக்ராகன்களாம் ஒன்பது கிரகங்கள் ஒரு மலர்ந்த தாமரை மலர்மீது தத்தம் நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். அந்த மண்டபம் அகலம் நீளம் கோபுர உயரம் அனைத்தும் ஒன்பதின் கூட்டு தொகையில் அமைக்கப்பட்டது தனி சிறப்பாகும். எனவே அனைத்து கிரகங்களும் சமமாக பாவிக்கப்பட்டு அனைத்து கிரக தோஷ பரிகார தலமாக அமைக்கப்பட்டுள்ளது.
சிவன் சன்னதி உள்ளே இடது பக்கம் சிறிய விநாயகர் வலது பக்கம் தண்டபாணியும் அமையப்பெற்றுள்ளது. கோயில் வெளிப்புறம் நுழைவாயிலுக்கு மேற்கில், கிழக்கு நோக்கிய காவல் தெய்வம் ஒன்று கையில் சாட்டையுடன் காட்சி தருகிறார்.
இத்தல விருட்சம் வில்வ மரமாகும். கற்பக விருட்சம் என்பது தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடைந்த போது தோன்றிய ஒன்றாகும். அதன் சிறப்பே மனதில் நினைத்த எதையும் நினைத்த உடனேயே வழங்குவதாகும். மனதில் நினைத்த எதையும் உடனே வழங்கும் கற்பக விநாயகர் மற்றும் அவரது தாயார் கற்பகாம்பிகை ஆகிய இருவரும் ஒருங்கே அமர்ந்து அருள் பாலிப்பது மிகமிக அரிதான ஒன்றாகும்.
தொடரும்

No comments:
Post a Comment