சிவபெருமான்
ஸ்தல வரலாறு-8
அக்கல்வெட்டுகள் கூறும் செய்திகள்: இவ்வாலயத்தில் எட்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கி.பி. 11 ம் நூற்றாண்டை ஒட்டியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலாம் இராஜேந்தர சோழன் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கிராமம் அக்கல்வெட்டு செய்திகளின் படி சிறிய
வெண்மணி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே காலப்போக்கில் சிறுகமணி என்று உருக்குறை [லை]ந்துள்ளது.
இவ்வூர் இராச கம்பீர வளநாட்டு சூரனூர் கூற்றத்தில் அமைந்திருந்ததாகவும் , மற்றோர்
இடத்தில கங்கை கொண்ட சோழவளநாட்டு திரைமூர்
நாட்டில் நாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சோழர் காலத்தில் முழுமையாக கட்டப்பட்ட இக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துள்ளது. சில நூறு வருடங்களுக்கு
பின்பு சுமார் வருடங்களுக்கு பின்பு சுமார் கி.பி.
14 ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் சிவன் சன்னதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பல நூறு கல்வெட்டுக்கள் காலவெள்ளத்தால் அழிக்கப்பட்டு கிடைக்கபெறாத நிலையில் அரிதாக கிடைத்த சில கல்வெட்டுக்களை
மட்டும் அங்கும் இங்குமாக வைத்து கட்டப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்டது போக எஞ்சிய கல்வெட்டுக்களே நாம்
தற்போது காண்பதாகும். இக்கோயிலில் அமைந்துள்ள கற்பகவிநாயகர்
சன்னதியில் காணப்படும் கி.பி. 12 ம் மற்றும் 15 ம்
நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கற்பக விநாயகர் பெருமைகள்
அப்பிள்ளையாருக்கு அமுது படிக்காகவும், திருநாமத்து காணிக்கையாகவும், அளிக்கப்பட்ட கொடைகள், திருப்பணிகள்,நிலங்கள்,அந்நிலங்களின் நான்கெல்லை விவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
தொடரும்

No comments:
Post a Comment