![]() |
| சிவ பெருமான் |
அதாவது 'இந்த்ரிய சுகங்களை' வென்றவன். அல்லது 'இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்ட தேவ நிலையை அடைந்தவன். என்று பொருள்.ஆனால், இந்திரன், பிரம்மா முதலானோர் பல தவறுகளை செய்துவிட்டு, அதனால் பல சாபங்களை பெற்ற சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிட்\ருக்கிறோம்.
இவைகளெல்லாம் தேவ நிலையில் உள்ளவர்களும் மனிதர்களின் தவறுகளை ஏற்றுக்கொண்டு, பல
துன்பங்களை மனித உடலில் அனுபவித்து, மனிதச் சமுதாயத்தை கரையேற்ற உதவும் வழிமுறைகளைக் காட்டிய நிலையே, இவற்றில் ஒன்றே இந்திரன் - அகலிகை சாப விமோசன நிகழ்ச்சி.அதை விரிவாக காண்போமா.
மனிதனுடைய எல்லாவிதமான துன்பங்களுக்கு காரணம் ஆசையே. ஆனால், ஆசையை அறுத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.இந்தப் பாடத்தை மானுடர்களுக்கு புகட்ட எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலே இந்திரன் சாப விமோசன லீலையாகும்.
ஒரு யுகத்தில் தேவலோக அதிபதியாய் திகழ்ந்த இந்திரன் ஈசனை நோக்கி தவம் இயற்றினான்.அவனுடைய விருப்பம் 'எம்பெருமானைக் காண ஆயிரம் கண்கள் பெறவேண்டும்' என்பதே.பல யுகங்கள் தவத்திற்குப் பின் எம்பெருமானாம் ஈசன் அவன் முன்னே தோன்றி "இந்திரா! எதை நோக்கி இந்தக் கடும் தவத்தை நீ மேற்கொண்டுள்ளாய்? நீ விரும்பும் வரம் என்னவோ?" என்று வினவினார்.
தொடரும்

No comments:
Post a Comment