![]() |
| சிவ பெருமான் |
நமசிவாய மந்திரம்-2
நமசிவாய பஞ்சாக்கர பதிகம் திருநாவுக்கரசர் அருளியது. சமணர்கள் திருநாவுக்கரசருக்கு பல கொடுமைகள் செய்தனர். அவரைப் பெரிய கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளிவிடுகிறார்கள். பஞ்சாக்கர பதிகம் பாடிய உடன் அவர்கள் கட்டுகள் அவிழ்ந்து கல்லும் தெப்பமாகி மிதக்கிறது. அவர் கரையேறுகிறார். அந்த இடம் கடலூருக்கு அருகில் "கரையேறிய குப்பம்" என்று இன்று விளங்குகிறது. இதிலிருந்து "நமசிவாய" மந்திரத்தின் பெருமைகளைப் புரிந்து கொள்ளலாம்.
நமசிவாய என்பது பஞ்சாக்கரம் :
'நம சிவாய' என்பது இறைவனின் திருவைந்தேழுதான தூல வடிவம். சிவாய நமஹா என்பது இறைவனின் நுட்பவடிவத்தை குறிக்கும். சிவாய என்பது அதிநுட்ப வடிவம்.
இறைவனைப் பற்றிய ஐந்தெழ்து வேதத்திற்கு இருதயம் போன்றது. வேதங்களுள் யஜுர்வேதம் முக்கியமானது. அதற்க்குள் தைத்ரிய சம்ஹிதை ஏழு காண்டங்களுள் அதன் மததியமான பாகத்தில் நாலாவது காண்டம் நடுநாயகனாக மிக முக்கியமாக விளங்குகிறது. அதற்குள்ளும் மத்திய பாகமான ஐந்தாவது 'பிரச்னம்' முக்கியமானது. அதுதான் 'ஸ்ரீருத்ரம்' என்ற பகுதியாகும். அதற்குள்ளும் "நமசிவாய" என்ற பஞ்சாக்கரம் மததியில் உள்ளது. அதன்மத்தியில் 'சிவ' என்ற இரண்டு அட்சரம் அடங்கி உள்ளது.
தொடரும்

No comments:
Post a Comment