AMAZON SHOP

Sunday, January 17, 2010

NAMASIVAYA MANDHIRAM-3


 சிவ பெருமான்  
நமசிவாய  மந்திரம்-3

                  இம்மந்திரத்தை இடையறாது மனதில் உச்சரிப்பவர்கள் சிவ சொரூபம் அடைகின்றனர். 

    சிவாய நம என்றும் மந்திரத்தை எல்லோரும் பொதுவாக த்யாநிக்கின்றனர்.  

     திருவைந்தெழுத்தை உச்சரிப்பதற்கு ப்ராரத்தவினை தாக்காதிருக்கவேண்டும். தாக்குமாயின் உச்சரிக்க முடியாது. 

   "சிவ" என்பது மங்களகரமானது என்பதாம்.

      சிவ என்பதை சிவா என்று நீட்டினால் அருவ சக்தியாகிய அம்பிகையைக் குறிக்கும்.  

    'சிவாய நம' என்னும் மந்திரமே பஞ்சாட்சரம்,பஞ்சாக்கரம்,திருவைந்தெழுத்து எனப்படுகிறது. 

   சிவவாக்கியர் தன் நூல் தொடங்கும் காப்புச் செய்யுளில் கூறும் மந்திரம் "நமசிவாய" என்பது "அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும ஆறிரண்டுநூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்" என்றார்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் "நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே" என்று ஓர் அரிய திருப்பதிகத்தை அருளிச் செய்தார் .

    "சிவாய நம" என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி" என்று நாவுக்கரசர் இறைவனைக் கேட்கிறார்.

  மாணிக்கவாசக ஸ்வாமிகள் தமது திருவாசகத்தில் "நமசிவாய வாழ்க" என்று தொடங்கியுள்ளார்.மேலும் "நானேயோ தவம் செய்தேன் சிவாய நம" எனப்பெற்றேன் என்கிறார்.

தொடரும் 

     








    








      


     

No comments:

Post a Comment