![]() |
| சிவ பெருமான் |
நமசிவாய மந்திரம்-4
ஞானசம்பந்தர்
"வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த கூன்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே"
"செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே"
"இம்மைவினை அடர்தெய்து போழ்கினும்
அம்மையினுந் துணை அஞ்செழுத்துமே"
என்று உபதேசித்துள்ளார்.
அப்பர் ஸ்வாமிகள்
"கற்றுணைப் பூட்டி - ஓர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே"
"நாவினுக் கருங்கலம் நமசிவாயவே"
"விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்விழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகில் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமசிவாயவே"
"நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நானறி விசையும்
நமசிவாயவே நாதவின் றேத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமே"
இவ்வாறு சைவசமய ஆசாரியர் பலரும் உலகுக்கு உபதேசிப்பது பஞ்சாட்சர மந்திரம் ஒன்றையே ஆகும்.
தொடரும்

No comments:
Post a Comment