![]() |
| சிவபெருமான் |
உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் மூலமாய் இருப்பது ஓம்காரம் என்னும் பிரணவ நாதமே. இறைவனை வழிபடும் உபாசனா மார்கமான சாக்த உபாசனை, கௌமார உபாசனை போல் ப்ரனவனாததையே ஆதியந்த உபாசனையாகக் கைக்கொள்ளும் மார்க்கமும் மார்க்கமும் உண்டு. ப்ரணவ நாத மார்கத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டும் பல பிரணவத் தலங்கள் உலகெங்கிலும் வியாபித்துள்ளன.
குறிப்பாக கும்பகோணம் அருகே உள்ள திருஇடைமருதூர் ஓம்காரப் பிரகாரத் தலமாகவும்,திருச்செந்தூர் ஓங்காரப் பிரணவ நாதத் தலமாகவும், செங்கோட்டை அருகே உள்ள திருமலை பிரணவ வாயுத் தலமாகவும்,திருச்சி அருகே உள்ள உய்யகொண்டான் திருமலை உஜஜீவநாதர் திருத்தலம் ப்ரணவ பந்துத் தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகின்றன.ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருத்தலம் ஸ்ரீசக்கரத்தின் மேருவைப்ப்போல பிரணவத்தின் மேருவாக பொலிகின்றது என்பது இதுவரை எங்குமே வெளிவராத தேவ இரகசியமாகும்.
தொடரும்

No comments:
Post a Comment