AMAZON SHOP

Sunday, December 26, 2010

STHALA VARALARU- 10

            


  LORD SIVA
          




         ஸ்தல வரலாறு-10
        
   பரிவார தேவதைகளில் கற்பக விநாயகருக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வினாயகருக்கு மன்னர்கள்,பாண்டியதேவர் போன்றோர்களால் பூஜைக்கு செய்த தானங்கள் திருப்பணிகள் போன்றவை  கி.பி.       ம்  நூற்றாண்டில் இருந்து கி.பி. 15  , 16  நூற்றாண்டு வரை நிகழச்சிகள் யாவும் கற்பக விநாயகர் கோயில் நான்கு கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் அப்பிள்ளையார் பற்றிய பெருமை கூறும் பாடலும்  இடம் பெற்றுள்ளது.
       எனவே ஆன்மீக அன்பர்களே! 
    அதி புராதனமான காவிரி தென்கரை சிவதலமாம் கோயில்களில் சிறந்து விளங்கும் புண்ணிய தலமாம் ப்ரம்மா, விஷ்ணு,ருதிரன் மும்மூர்த்திகள் சேர்ந்து அருளும் தலமாம் 
      தன் குழவியாய் அரவணைக்கும் பக்தவத்சலேஸ்வரர் வசிக்கும் தலமாம் 
    இரு கற்பக கனிகளாம் கற்பக விநாயகர் மற்றும் கற்பகாம்பிகை அருளும் தலமாம் 
    சிறந்த சித்து விளையாட்டுகள் நடைபெற்ற அச்சித்தர்கள் வாழும் தலமாம் 
     அர்ஜுனனுக்கு ஞானக்கண் திறந்த துர்க்கை தேர்    தலமாம்  
   ஒன்பது கிரகங்களின் பரிகார நவகிரக திருத்தலமாம் 
        ச  சிறுகமணி விரைவீர்! 
       இறையருள் பெறுவீர்  !!!
       பேரின்பம் அடைவீர்  !!!!  
           திருச்சிற்றம்பலம் 
         முற்றும்.      
    












   













Sunday, December 19, 2010

STHALA VARALARU -9

          


LORD SIVA
 


   ஸ்தல வரலாறு-9

 தற்போது தேவஸ்தானம்,
பெட்டவைதலையில் அமைந்துள்ள அருள்மிகு மத்யார்ஜுநேஸ்வரர் திருக்கோயில் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும். மேற்கண்ட சிவன் கோவிலை கட்டி அவ்வூருக்கு இராஜேந்திர 
சோழன் பேட்டை என்று பெயரிட்டு, பலவிதமான தானங்களை வழங்கியுள்ள காரனத்தால் இக்கோயிலும் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதுதான் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.


   மேலும் இராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் அமைந்துள்ள அம்பாள் 
 திரஊருவங்கள் மட்டுமே மேலிரு கரங்கள் தாமரை மலர்கள் அமைக்கப்பெற்றதாக 
உள்ளது என்பதை உற்றுநோக்குதற்குரியாது. ஆலமர் கடவுள், லிங்கோத்பவர்,விஷ்ணு துர்க்கை கல்லில் செதுக்கி 
 எடுக்கப்பட்ட அழகு வேலைப்பாடுகளுடன் கூடிய கல்,
ஜன்னல்,அதன் தோகை மையிலில் அமைந்துள்ள முருகப்பெருமான்,புடைப்பு சிற்பம்,அதற்கு ஏற்றவாறு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சிருதனி மேல்மண்டபம் ஆகியன சோழர் காலத்து கலை நுணுக்கங்களுக்கு எடுத்து காட்டுகளாக அமைந்துள்ளது.மேலும் தஷிணாமூர்த்தி சந்நிதி கோஷ்டதிற்கு
ஏற்ப வேலைப்பாடு உடைய சிறு முன் மண்டபம் 
அமைக்கப்பட்டிருப்பது  மிகச் சிறப்புடையதாக
கருதப்படுகிறது.

தொடரும்


                                                                 











                                                                                                        
                                     

Sunday, December 12, 2010

STHALA VARALAARU - 8

                                                                      சிவபெருமான்

   ஸ்தல வரலாறு-8

             அக்கல்வெட்டுகள் கூறும் செய்திகள்: இவ்வாலயத்தில் எட்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கி.பி. 11  ம் நூற்றாண்டை ஒட்டியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலாம் இராஜேந்தர சோழன் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில்களில்  இதுவும் ஒன்றாகும். இக்கிராமம் அக்கல்வெட்டு செய்திகளின் படி சிறிய 
வெண்மணி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே காலப்போக்கில் சிறுகமணி என்று உருக்குறை [லை]ந்துள்ளது.
       இவ்வூர் இராச கம்பீர வளநாட்டு சூரனூர் கூற்றத்தில் அமைந்திருந்ததாகவும் , மற்றோர் 
இடத்தில கங்கை கொண்ட சோழவளநாட்டு திரைமூர் 
நாட்டில் நாட்டில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

     சோழர் காலத்தில் முழுமையாக கட்டப்பட்ட இக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துள்ளது. சில நூறு வருடங்களுக்கு
பின்பு சுமார் வருடங்களுக்கு பின்பு சுமார் கி.பி.
14  ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட இக்கோவில் சிவன் சன்னதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பல நூறு கல்வெட்டுக்கள் காலவெள்ளத்தால் அழிக்கப்பட்டு கிடைக்கபெறாத நிலையில் அரிதாக கிடைத்த சில கல்வெட்டுக்களை 
மட்டும் அங்கும் இங்குமாக வைத்து கட்டப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்டது போக எஞ்சிய கல்வெட்டுக்களே நாம் 
தற்போது காண்பதாகும். இக்கோயிலில் அமைந்துள்ள கற்பகவிநாயகர் 
சன்னதியில் காணப்படும் கி.பி. 12   ம் மற்றும் 15  ம் 
நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கற்பக விநாயகர் பெருமைகள் 
அப்பிள்ளையாருக்கு அமுது படிக்காகவும், திருநாமத்து காணிக்கையாகவும், அளிக்கப்பட்ட கொடைகள், திருப்பணிகள்,நிலங்கள்,அந்நிலங்களின் நான்கெல்லை விவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

தொடரும்


                      
   









                                              

Sunday, December 5, 2010

STHALA VARALAARU - 7


                                              சிவபெருமான் 
  

         ஸ்தல வரலாறு-7

       அருள்மிகு பக்தவத்சலேஸ்வரர் சன்னதி,கர்பகிரகதிற்கு அடுத்து அர்த்த மண்டபம்,கீழ்மேலாக வடபுரமும்,தென்புறமும் இருமேடைகள் அமைக்கப்பெற்றுள்ளது. தெற்குமேடை ஒரு மேன்மையான ஞானி ஒருவர் சமாதி என்றும் அவர் கமணீய பிரனவநாதர் என்றும் கூறப்படுகிறது. பலவேளைகளில் பல ரூபங்களில் கண்டு களிதுள்ளதாக பல பெரியவர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். எனவே  கமணிய பிரனவநாதர் திருத்தலம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இவ்வாறு பல சித்து விளையாட்டுகளை கொண்ட  சித்தர் பெருமக்கள் உண்டு வாழ்ந்து , கண்டு களித்து , விண்டு உணர்ந்து உய்வித்த இடமே அருள்மிகு கற்பகாம்பிகை உடனமர் பக்தவத்சலேஸ்வரர் திருத்தலமாகும்.

   இத்திருக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலைய ஆட்சித்துறை கட்டுப்பாட்டில் பெட்டவாய்த்தலை அருள்மிகு மத்யார்ஜுநேஸ்வரர் திருக்கோயில் நிர்வாக அலுவலர் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாகும். காலம்,பழமை, நாகரீகம் , ஆன்மிகம் ,செய்தி போன்றவற்றை காட்டும் காலக்கண்ணாடியாம் கல்வெட்டுக்கள் பல இத்திருக்கோயிலில் இருந்து  அழிந்து இருப்பினும் சில கல்வெட்டுக்கள் இன்று வரை நிலைத்து     நமக்கு ஆன்மீக செய்திகளை வெளிக்காட்டுவதாக உள்ளது. அவற்றுள் அருள்மிகு அருள்மிகு கற்பக விநாயகர் சன்னதியில் அமைந்துள்ள நான்கு கல்வெட்டுகளும் முக்கியமானதாக உள்ளது.

தொடரும் 

     





   





                        

Sunday, October 10, 2010

STHALA VARALAARU - 6


     
          
                                       LORD SIVA 
                          

ஸ்தல வரலாறு- 6 
   

        பக்த+வத்சலம்  = பக்தவத்சலம் ஆயிற்று. தன் குழந்தைகளை காப்பது போல் அரவணைத்து காப்பவர் என்று பொருள்.எனவே பக்தவத்சலேஸ்வறரை   தரிசித்தல் என்பது வானளாவிய உயர்ந்த செயலாகும். வார்த்தையில் வர்ணிக்க இயலாத வளங்களை வாரி வாரி வழங்கும் தலம் சிறுகமணி ஆகும். 


    மாலை வேளை நான்கைந்து சிறுவர்கள் சிவன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டிற்கு இடையூறாக சாந்தம் தவழும் சாது ஒருவர் குறிக்கிட்டு ஒரு சிறுவனை நோக்கி தம்பி குடிக்க தண்ணீர் வேண்டுமே? என வினவுகிறார். அச்சிறுவன் பெரியவருக்கு தண்ணீர் கொடுக்கும் பொருட்டு தன் வீடு நோக்கி செல்கிறான். அப்பெரியவரும் உடன் தொடர்கிறார். ஒரு செம்பு தண்ணீருடன் வீட்டின் வெளியே வந்த சிறுவன் வீட்டு வாயிலில் அப்பெரியவரை காண்கிறான். 


 தண்ணீரை அவர்முன் நீட்ட பெரியவர் பெற்றுக் கொள்கிறார். நீரை பெற்ற பெரியவர் தரையில் அத்தண்ணீரை ஊற்றுகிறார். மண்ணைக் குழைக்கிறார். இருகவளம் வாயில் போட்டு விழுங்கி நீரை பருகுகிறார். செம்பை அச்சிறுவன் கையில் கொடுத்துவிட்டு வந்த வழியே சென்று மறைந்து விடுகிறார்.


தொடரும் 
   
   












     













Sunday, September 26, 2010

STHALA VARALAARU - 5




ஸ்தல வரலாறு- 5
     
   
  நவக்ராகன்களாம் ஒன்பது கிரகங்கள் ஒரு மலர்ந்த தாமரை மலர்மீது தத்தம் நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். அந்த மண்டபம் அகலம் நீளம் கோபுர உயரம் அனைத்தும் ஒன்பதின் கூட்டு தொகையில் அமைக்கப்பட்டது தனி சிறப்பாகும். எனவே அனைத்து கிரகங்களும் சமமாக பாவிக்கப்பட்டு அனைத்து கிரக தோஷ பரிகார தலமாக அமைக்கப்பட்டுள்ளது. 

   சிவன் சன்னதி உள்ளே இடது பக்கம் சிறிய விநாயகர் வலது பக்கம் தண்டபாணியும் அமையப்பெற்றுள்ளது. கோயில் வெளிப்புறம் நுழைவாயிலுக்கு மேற்கில், கிழக்கு நோக்கிய காவல் தெய்வம் ஒன்று கையில் சாட்டையுடன் காட்சி தருகிறார்.

  இத்தல விருட்சம் வில்வ மரமாகும். கற்பக விருட்சம் என்பது தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடைந்த போது தோன்றிய ஒன்றாகும். அதன் சிறப்பே மனதில் நினைத்த எதையும் நினைத்த உடனேயே வழங்குவதாகும். மனதில் நினைத்த எதையும் உடனே வழங்கும் கற்பக விநாயகர் மற்றும் அவரது தாயார் கற்பகாம்பிகை ஆகிய இருவரும் ஒருங்கே அமர்ந்து அருள் பாலிப்பது மிகமிக அரிதான ஒன்றாகும்.

தொடரும் 

   




   






               

Sunday, September 19, 2010

STHALA VARALAARU - 4

           
 LORD SIVA  
ஸ்தல வரலாறு- 4


  பிரம்மா: சிவனின் கோமுகிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பிரம்மா சிலாரூப சாமுத்ரிகா லட்சணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற திறுருவுருவமாக காட்சியளிக்கிறது.


 மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அவனது ஞானக்கண் திறக்க வேண்டி விஷ்ணுதுர்கையாக அத்தேர் மீதேயமர்ந்து காட்சி கொடுத்த அம்பிகை அந்த நிலையிலேயே தேர்மீதமர்ந்த படியே காட்சியளிக்கிறார். இது மிக அறிதான அமைப்பாகும்.


   எதிர்புறத்தில் சண்டிகேஸ்வரர்  காட்சி தருகின்றார்.வடகிழக்கு மூலையில் அபிஷேக நாழி கிணறு அமைந்துள்ளது.அதன் அருகில் நவகிரக புதுமண்டபமும், சிவன் சன்னதிக்கு உள்ளே அமைந்திருந்த பைரவர் சன்னதி கிணற்றுக்கு அருகிலும் சூரியன் சன்னதி வாயில் நந்தியெம் பெருமானுக்கு தென்கிழக்கு மூலையிலும் புதியதாக மண்டபம் எழுப்பி ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது.     


தொடரும் 


   














   













Sunday, September 5, 2010

STHALA VARALAARU - 3

   
  LORD SIVA
 ஸ்தல வரலாறு- 2 
             
        முதலில் நம் கண்ணுக்கு புலப்படுவது மயில் மீதமர்ந்த முருகன் புடைப்பு சிற்பம் அதன் மேல் சிறியகல் மண்டபம் அதன் கீழ் கல் ஜன்னல், தெற்கு நோக்கிய நிலையில் ஞானமளிக்கும் குருவாக காட்சி தருகிறார்.சுற்றுப்புரத்தே நாம் காண்பது நடனமாடும் நர்தன விநாயகரை அடுத்து காட்சி தருவோர் தென்முக கடவுளாம் தகிஷினாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்துள்ள தட்சினாமூர்த்தி அமைப்பு மிகவும் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. சனகாதி முனிவர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க ஞ்னகுருவாம் குருபகவான் தெற்கு நோக்கி காட்சி தருகிறார்.


   கிழக்கு நோக்கிய நிருதிவினாயகராம் கற்பக விநாயகர் வள்ளி , தெய்வானை சமேத சுப்பிரமணியர் லிங்கோத்பவர் பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.         


  லிங்கோத்பவர்: சிவனின் அடிமுடி காண இயலாத அண்ணலின் சரித்திரத்தை விளக்கும் வகையில் பிரம்மா அன்னப்பறவையாக சிவனின் முடி காண மேல்நோக்கி சென்று தோல்வியுற்று திரும்பியதையும், விஷ்ணுபகவான் சிவனின் அடிகாண்பதற்காக வராக ரூபம் எடுத்து கீழ் நோக்கி சென்று தோல்வி அடைந்ததையும் தத்ரூபமாக விளக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.


தொடரும்


 DHINAMALAR- NEWS
      
Yoga:the Sivananda Yoga Video [VHS]



   









Sunday, August 29, 2010

STHALA VARALAARU - 2

                       


     LORD SIVA 
         ஸ்தல வரலாறு- 2  
        
அக்கவேரி நதியில் தெற்கே அமைந்த பல சிவாலயங்களில் சிறுகமணி அ / மி கற்பகாம்பிகை உடனுறை பக்த வத்சலேஸ்வரர் சிவன்கோவில் மிகவும் பழமையானதாகும்.இத்திருக்கோயில் திருச்சி,கரூர் நெடுஞ்சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 22  கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றுள்ளது. கணக்கில் அடங்கா வேத மந்திர, சாஸ்திர விற்பன்னர்களாம் பக்த சிரோன்மணிகள் வசித்து வந்த இடமாதலால் சிரோன்மணி என்றழைக்கப்பட்டு அதுவே சிறுகமணி என்று கூறப்படுகிறது.


நெல்,வாழை கரும்பு,தென்னை என எங்கும் பசுமை சூழ்ந்த அழகு மிளிரும் கிராமம் சிறுகமணி ஆகும்.

இத்திருக்கோயில் கி.பி. 11  ம் நூற்றாண்டு புராதனமாக அறியப்படுகிறது.கோயிலில் நுழைந்தவுடன் நலம் தரும் நந்தியம் பெருமான் நம்மை வரவேற்பதுபோல் காட்சி தருகிறார்.மூலவர் பக்தவத்சலேஸ்வரர் சுயம்புலிங்கம்.  
அன்னை கற்பகாம்பிகை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.நான்கு திருக்கரங்களை உடையவள்.மேலிரு கரங்களிலும் பத்மம் எனும் தாமரையை தாங்கியவராக உள்ளார்.கீழிரு கரங்களில் இடக்கரம் தன் பாதத்தை பற்றிக் கொள்ள காண்பித்தும், வலக்கரம் அபயமளிப்போம் வந்து சேர் என்பதாகவும் அமைந்துள்ளது.அம்பாள் பீட அமைப்பு சிற்ப கலை நுணுக்கங்களில் மிக தேர்ச்சி பெற்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்ட திருகுபீட அமைப்பாகும்.இவ்வமைப்பு அரிதிலும் அரிதாக உணரப்படுகிறது.


தொடரும் 
   







  


  


   


     

Saturday, August 28, 2010

STHALA VARALAARU - 1

        
SIRUGAMANI CAUVERY RIVER BANK
                     



  கங்கையிற் புனிதமாய் காவிரி என்ற காவிரிக்கு 
உயர்வளிக்கப்பட்டுள்ளது. 
காவேரி,காவிரி என்ற இரு சொற்களும் பொருத்தமான ஒன்றே. கா: பாவநீக்கம். வே:விரும்பியதை தருபவள். ரி:மோட்சமளிப்பவள் சகல பாவங்களையும் நீக்கி விரும்பியதை வழங்கி மோட்சமளிப்பவள் என்று பொருள்படும். 


 கா:சோலை,வி:விசை அல்லது சக்தி ரி :பரந்த, விரிந்த, சக்தியுடன் அல்லது விசையுடன் சோலை போல் அழகோடு கூடிய விரிந்து வரும் காவிரி என்பது விளக்கமாகும். 


 ஒருவர் தன் பாவங்களை முழுவதும் போக்கிக் கொள்ள கங்கையில் 3  தினங்கள்  தங்கி குளிக்க வேண்டும்.


    யமுனையிலோ 5 தினங்கள் தங்கி குளிக்க வேண்டும். ஆனால் காவிரி பாயும் தேசத்தில் வசித்தாலே முக்தி. காவிரி கரையில் வசித்தாலோ அதனினினும்  சீக்கிரம்  முக்தி. காவிரியில் பட்ட காற்றை ஸ்வாசிதலோ கோடானு கோடி புண்ணியம்.


   லட்சோப் லட்ச மக்கள் குளித்த காரணத்தால் தன் மீது படிந்துள்ள பாவங்களை போக்கிக் கொள்ள கங்கையானவள் காவேரி ஸ்நானனம் எனும் ஐப்பசி 1  அதிகாலை காவிரியில் வந்து நீராடுவதாக ஐதீகம்


 தொடரும் 




 








  











Tuesday, August 24, 2010

vinayagar thuthi

     கற்பக விநாயகர் துதி:-
    மூத்தோன் தன்பின்னை காப்போன் என்றென்றும் 
     மலை என நிற்கும் இடரனைத்தும் நீக்கும் எம் 
    தலைவ ! அருள்புரி! ஆதரி கற்பக விநாயகனே...


   கற்பகாமிகை துதி:- 
  கற்பகமே! கனியமுதே கலங்கரை விளக்கமதே 
  அற்பமான எனை இனிதேற்றி கரை காணவைத்த 
  பொற்பதமே போன்னணியே பூ தலைத்து புகழ்மணியே 
  கற்றுணரும் கல்வியதை பெரிதுணர வைப்பாய் நீயே