சிவ பெருமான்
இந்திரன் எம்பெருமானைப் பணிந்து வணங்கி,"ஈசனே! அடியார்களின் நேசனே!அறியாமையால் தங்களிடம் ஆயிரம் ஊனக் கண்களை அபசாரம் செய்துவிட்டேன்.ஆனால் தாங்களோ பெரும் கருணை கூர்ந்து, அடியேனுக்கு அகக் கண்ணான ஞானக் கண்ணையே வழங்கி விட்டீர்கள். ஆயிரமாயிரம் ஊனக் கண்களைவிட, ஞானம் புகட்டும் ஒரு அகக் கண்ணே உயர்ந்தது என்ற அற்புதமான பாடத்தை இன்று எனக்குப் புகட்டி விட்டீர்கள். தங்கள் கருணைக்கு எல்லைதான் உண்டோ?" என்று மனம் விட்டுக் கதறி அழுதான்.
ஆயிரம் கண்ணுடையார்!
இந்திரனுக்குச் சாப விமோசனம் அளித்து அவன் கண்களைத் தம் லிங்கத் திருமேனியில் ஏற்றதால்,சித்தர்கள் சிறுகமணி ஈசனை 'சகஸ்ராட்ஷா நாதர்' அதாவது 'ஆயிரம் கண்களை உடையவர்' என்று போற்றுகின்றார்கள்.
இதிருதல இறைவனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உரைவதை இன்றும் பக்தர்கள் தரிசித்து அனுக்ரகம் பெறலாம்.
தொடரும்
 |
| சிவ பெருமான் |
பரிந்து காத்த பக்தவத்சலன்!
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தங்கள் தவறுக்கு உரிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். இறைவனின் தண்டனையிலிருந்து எவருமே தப்ப முடியாது. இது இறைவனே விதித்த விதி. இந்த இயற்கை விதியிலிருந்து எவருக்குமே விலக்கு கிடையாது.இது இறைவனே விதித்த விதி. இந்த இயற்கை விதியிலிருந்து எவருக்குமே விலக்கு கிடையாது. அதனால் இந்திரன் உடலிலிருந்த கண்களையும், கரிய நிறத்தையும் வெண்மணி ஈசனே மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.
ஓராயிரம் யுகங்கள் முடிவடைந்தவுடன் இந்திரன் பூரணமான சாப விமோசனத்தை பெற்றான்.அவன் உடலிலிருந்த கண்கள் அனைத்தையும் எம்பெருமானே ஏற்றுக்கொண்டார்.இறைவனின் எல்லையில்லாக் கருணையை உணர்ந்த இந்திரன் மனம் உருகி, ஆனந்தக் கண்ணீர் மல்க எம்பெருமானை நோக்கி, "பக்தவத்சலா! பக்தவத்சலா! பக்தவத்சலா! " என்று அழைத்துக் கூத்தாடினான்.அவ்வாறு இந்திரன் தன்னை வேண்டித் துதித்த நாமத்தையே, வெண்மணி ஈசன் அன்று முதல் தமக்குரிய திருப்பெயராய் அன்போடு ஏற்றுக் கொண்டார்.
'பால்வண்ண நாதர்' எனப் பல யுகங்களாய்த்
திகழ்ந்த ஈசன், தற்போது 'பக்தவத்சலேஸ்வரர்'
என்ற திருநாமம் தாங்கி, தன்னைத் தேடி வந்து
பணியும் பக்தர்களுக்குப் பரிவுடனே அருள் பாலிக்கின்றார்.இந்திரனுக்குச் சாப வோமோசனம் தந்த அந்த வெண்மணித் திருத்தலம் காலப்போக்கில் 'சிறுகமணி' எனப் மாறி,திருச்சி அருகே காவிரிக் கரையில் ஒரு சிற்றூராய் இன்று விளங்குகின்றது.
தொடரும்