AMAZON SHOP

Sunday, January 30, 2011

STHALA MAGIMAI-5


 சிவ பெருமான் 
  ஸ்தல மகிமை-5

     இருந்தபோதிலும் பீஜாட்சர சக்தியால் மனிதர்களுக்கு கிடைக்கும் பலனை விளக்குவது எளிதானதே.மனித உடலில் உள்ள சூட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதாவது, உல் சூடு, நடுச் சூடு,வெளிசூடு என்று மூன்று விதமான உஷ்ண நிலைகள் ஒவ்வொரு மனித உடல், மன இயக்கத்தைப் பரிபாலனம் செய்கின்றன.


  நாம் ஏற்கும் உணவு,நம்முடன் பழகும் மனிதர்கள் ,நம்மை ஆட்கொள்ளும் என்ன அலைகள் ஆகியவை நம் உடலில் உள்ள அந்தந்த வகை சூட்டுடன் பரிமாற்றம் அல்லது பரிவர்தனை செய்து செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த விதிக்கேற்ப நிகழச்சிகள் நடைபெறும்போது , நமது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு எதிரான பரிவர்தனை அல்லது தொடர்பு ஏற்படும்போது,பலவித நோய்கள் நம் உடலையும்,உள்ளத்தையும் நிச்சயம் தாக்கும்.


   உதாரணமாக,இளநீர் உள்சூடு சக்தியை உடையது. ஆகவே அதிகாலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்தினால், அது நமது உடலில் உள்ள உள்சூட்டுடன் தொடர்பு கொள்வதால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து ,சிறுநீரகங்கள்,மலக்குடல் போன்ற உள்ளுறுப்புகள்  வலிமை பெறுகின்றன. இந்த உறுப்புகளில் உள்ள நரம்புகளும்,இரத்தக் குழாயகளும் தூய்மை அடைகின்றன.


தொடரும் 


    












   










              

Sunday, January 23, 2011

STHALA MAGIMAI-4


 சிவ பெருமான் 
 ஸ்தல மகிமை-4 

    பிரணவ நாதம் 'அ','உ','ம' என்ற மூன்று ஒலிக்கூருகளையும் 1001 பீஜாட்சரக் கூறுகளையும் உடையது.இந்த சகஸ்ர பீஜாட்சரங்களில் மூன்றாவதாக அமைந்த பீஜாட்சர சக்தியே கமணீயம் என்னும் சக்தியாகும்.


   நமது பாரத பூமியில் தேவியின் 51 சக்தி      பீடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு திருக்கோயில்கள் அமைந்திருப்பதுபோலவே பிரணவத்தின் 1001 பீஜாட்சரக் கூருபாடுகளுக்கும் பல சிவலிங்கங்கள் தோன்றி,அனைத்து உயிர்களையும் காத்து வருகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் இலிங்க வித்துக் கூறு வித்தை என்னும் என்னும் சித்தா கிரந்தங்களில் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளன.திருச்சி அருகே உள்ள சிறுகமணி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரிபக்தவத்சலேஸ்வரர்  பிரணவத்தில் பொதிந்திருக்கும் கமணீய சக்திகளை பூவுலகில் நிரவும் அனுகிரக மூர்த்தியாக அமைந்துள்ளது நமக்குக் கிடைத்துள்ள பெரும் பாக்கியமே! 


     கமணீய சக்தி  - ஒரு விளக்கம் 

    கமணீயம் என்னும் பீஜாட்சர சக்தியை மனிதர்களுக்குப் புரியும் விளக்குவது மிகவும் கடினமான செயல்.பீஜாட்சர ரகசியங்களைஎல்லாம் மனித மனம் புரிந்துகொள்வது கடினம் என்பதால்தான் இறைவனின் பரம ஸ்வரூபதையே பல கல்யாண குணங்களாக வர்ணித்து,சகஸ்ர நாமம் என்று ஆயிரம் நாமங்களால் வழிபடும் முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் போன்ற சகஸ்ர நாமத் துதிகளில் இத்தகைய பிரணவக் கூறுபாடுகளே இறைவனின் திருப்பெயர்களாக,இறைப்பரம்போருளின்எல்லைஇல்லா லீலைகளாக, அவதாரக் கிருதியங்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன.


தொடரும் 
    










   











Sunday, January 16, 2011

STHALAMAGIMAI-3



 சிவபெருமான் 
                ஸ்தல மகிமை-3

     உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் மூலமாய் இருப்பது ஓம்காரம் என்னும் பிரணவ நாதமே. இறைவனை வழிபடும் உபாசனா மார்கமான சாக்த உபாசனை, கௌமார உபாசனை போல் ப்ரனவனாததையே ஆதியந்த உபாசனையாகக் கைக்கொள்ளும் மார்க்கமும் மார்க்கமும் உண்டு. ப்ரணவ நாத மார்கத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டும் பல பிரணவத் தலங்கள் உலகெங்கிலும் வியாபித்துள்ளன.


    குறிப்பாக கும்பகோணம் அருகே உள்ள திருஇடைமருதூர் ஓம்காரப் பிரகாரத் தலமாகவும்,திருச்செந்தூர் ஓங்காரப் பிரணவ நாதத் தலமாகவும், செங்கோட்டை அருகே உள்ள திருமலை பிரணவ வாயுத் தலமாகவும்,திருச்சி அருகே உள்ள உய்யகொண்டான் திருமலை உஜஜீவநாதர் திருத்தலம் ப்ரணவ பந்துத் தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகின்றன.ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருத்தலம் ஸ்ரீசக்கரத்தின் மேருவைப்ப்போல பிரணவத்தின் மேருவாக பொலிகின்றது என்பது இதுவரை எங்குமே வெளிவராத தேவ இரகசியமாகும்.


தொடரும் 
   










   











Tuesday, January 11, 2011

Flickr: saraghu's Photostream


SIRUGAMANI TEMPLE PHOTO STREAM-CLICK BELOW-BY SARAGHU
Flickr: saraghu's Photostream

Click here for the best hotel deals - HotelsCombined.comHAVE A NICE DAY!

Sunday, January 9, 2011

STHALA MAGIMAI-2


 சிவ பெருமான் 
            ஸ்தல மகிமை-2
        
           அவர் அருளிய முறைப்படி அவ்விடத்திலேயே கண்களை மூடியபடி தேவியை த்யானித்த அர்ஜுனன் தன் கண்களை திறந்து பார்த்தபோது, தேரின் மேல் ஸ்ரிக்ரிஷ்ணருக்கு  பதிலாக ஆங்கே துர்க்கா தேவி காட்சி அளித்தணல்!

    ஸ்ரீக்ரிஷ்ணர் அருளிய 'ஜயோ பவது மே நித்யம்' என்ற மந்திரத்தை ஓதியவாறே, 18 முறை சாஷ்டாங்கமாக துர்க்கா தேவியை வீழ்ந்து வணங்க, அர்ஜுனனின் மனத்தளர்ச்சி முற்றிலுமாக முற்றிலுமாக அகன்றது. புத்துணர்ச்சி பெற்றவனாய் போரிடத் தயாரானான்.

      தீயோரை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட வேண்டி ஸ்ரீக்ரிஷ்ணராய் அவதரித்தது ஸ்ரீமகாவிஷ்ணுதானே! அந்த தெய்வாம்சத்தின் ஒரு கூறே விஷ்ணு துர்கையாய்க் காட்சி தந்து, அர்ஜுனனின் மனத் தளர்வை போக்கியது. குருஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு தேரின் மேல் காட்சி தந்த தேவியே சிருகமணித் திருத்தலத்தில் கோஷ்ட மூர்த்தியாய் எழுந்தருளி அருள்பாலிக்கின்றால். 

  'என்ன முடிவெடுப்பது?' என மனம் தடுமாறும் இக்கட்டான சூழ்நிலைகள் அனைவர் வாழ்விலும் ஏற்படுவதுண்டு. அத்தகையோர் சிறுகமணி திருத்தலம் வந்து, கிஷ்டமூர்த்தியாய் அருளும் துர்கையைத் தக்க அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு, ஸ்ரீகிருஷ்ணர் அருளிய மந்திரத்தை ஓதியவாறே குறைந்தது 18 முறையாவது சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி வந்தால், தெளிந்த, தீர்க்கமான முடிவை எடுக்கும் மனத்திட்பம் கிட்டும்.

            ஓம் ஸ்ரீகுருவே சரணம் !!
  சுபம் 

      





   





          

Sunday, January 2, 2011

STHALA MAGIMAI -1

        LORD SIVA
            ஸ்தல மகிமை-1          


       இதுவரை இந்த சிறுகமணி ஸ்தலத்தின் வரலாற்றை பார்த்தோம். இனி இந்த ஸ்தலத்தின் மகிமைகளைக் காண்போம்.


     தன் சாபம் நீங்கபெற்றதால் இந்திரன் ஆனந்த மிகுதி கொண்டு இந்த ஸ்தலத்து இறைவனை 'பகதவத்சலா' என அழைத்தால் அதையே திருநாமமாக கொண்டு ஈசன் இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.


     பல்வேறு சிறப்பு அம்சங்களைத் தன்னுள் தாங்கி  நிற்கும் இந்த ஆலயத்தைப்பற்றி பலர் அறியாது இருக்கின்றனர். உதாரணமாக, இங்கு கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளியுள்ள துர்க்கா தேவியின் மகிமையை பார்க்கலாம்.


  குருஷேத்திர யுத்தத்தின் போது  'தன் உற்றார் உறவினரோடு யுத்தம் செய்வதா என்ற மனக் குழப்பம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டதையும், அதைப் போக்க ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா பகவத் கீதையை உபதேசிததையும் நாமறிவோம். அதற்குப்பின் நடந்த சம்பவங்களை இருடிகளின் மகாபாரதத்தில் மட்டுமே காணலாம்.


  கீதோபதேசம் பெற்ற பின்னரும் அர்ஜுனனின் மனத் தளர்ச்சி முற்றிலுமாக நீங்கவில்லை. ஆகவே, ஸ்ரீகிருஷ்ணர் துக்க நிவாரணியாகத் திகழும் துர்க்கா தேவியை வேண்டும்படி அர்ஜுனனைப்   பணிந்தார்.


தொடரும்