![]() |
| சிவ பெருமான் |
இருந்தபோதிலும் பீஜாட்சர சக்தியால் மனிதர்களுக்கு கிடைக்கும் பலனை விளக்குவது எளிதானதே.மனித உடலில் உள்ள சூட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதாவது, உல் சூடு, நடுச் சூடு,வெளிசூடு என்று மூன்று விதமான உஷ்ண நிலைகள் ஒவ்வொரு மனித உடல், மன இயக்கத்தைப் பரிபாலனம் செய்கின்றன.
நாம் ஏற்கும் உணவு,நம்முடன் பழகும் மனிதர்கள் ,நம்மை ஆட்கொள்ளும் என்ன அலைகள் ஆகியவை நம் உடலில் உள்ள அந்தந்த வகை சூட்டுடன் பரிமாற்றம் அல்லது பரிவர்தனை செய்து செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த விதிக்கேற்ப நிகழச்சிகள் நடைபெறும்போது , நமது உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு எதிரான பரிவர்தனை அல்லது தொடர்பு ஏற்படும்போது,பலவித நோய்கள் நம் உடலையும்,உள்ளத்தையும் நிச்சயம் தாக்கும்.
உதாரணமாக,இளநீர் உள்சூடு சக்தியை உடையது. ஆகவே அதிகாலையில் வெறும் வயிற்றில் இளநீர் அருந்தினால், அது நமது உடலில் உள்ள உள்சூட்டுடன் தொடர்பு கொள்வதால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து ,சிறுநீரகங்கள்,மலக்குடல் போன்ற உள்ளுறுப்புகள் வலிமை பெறுகின்றன. இந்த உறுப்புகளில் உள்ள நரம்புகளும்,இரத்தக் குழாயகளும் தூய்மை அடைகின்றன.
தொடரும்




