AMAZON SHOP

Wednesday, October 12, 2011

STHALA MAGIMAI-13


 சிவ பெருமான் 
                                                              
                 வெண்மணி வந்தடைந்தானே! 

   தாங்க முடியாத வெட்கமும் வேதனையும் அடைந்த இந்திரன் தக்க பரிகாரம் தேடி பூலோகம் வந்தான். பொன்னி நதி தீரத்தில் வெண்மணி என்ற திருத்தலத்தை அடைந்து,அங்கு குடிகொண்டிருந்த ஈசனைச் சரண் அடைந்தான்.அந்த ஈசனின் திருநாமமோ பால்வண்ண நாதர்,வெண்மணி ஈசன் என்பதாகும்.

    அக்காலத்தில் அதிருக்கொயிலைச் சுற்றி ஆவினங்கள் கூட்டமாக மேயும்.ஸ்ரிசிவபெருமானும் திறந்த வெளியில்தான் வீற்றிரின்தார். பசுக்கள் எல்லாம் அருணோதய வேளையில் வந்து,லிங்கத் திருமேனியில் தாங்களாகவே பாலைச் சொரிந்து விட்டுச் செல்லும். எம்பெருமானின் லிங்க வடிவமும் பால் வண்ண நிறத்தில் வெண்மையாக ஒளிரும். பால் சுரந்த திருமேனியில் காலைக் கதிரவனின் செங்கதிர்கள் பட்டு ஓளிரும் அக்காட்சியோ கயிலாயத்தை நேரில் தரிசிப்பது போல் கண்கொள்ளாக் காட்சியாக ஜொலிக்கும். 

    வெண்மணித் திருத்தலத்தில் இந்திரன் ஆயிரம் யுகங்கள் தொடர்ந்து தவம் இயற்றினான்.ஒவ்வொரு யுக முடிவிலும் அவன் உடலில் இருந்த ஒரு யோனிக் கண்ணை எம்பெருமான் தன்னுடைய லிங்கத் திருமேனியில் ஏற்றுக்கொண்டார். அதனால் அவருடைய உருவமும் சிறிது சிறிதாகக் கரிய நிறமாக மாறத் தொடங்கியது. மாறாக இந்திரன் படிப்படியாகத் தன்னுடைய சுய உருவத்தையும் தேவ ஒளியையும் மீண்டும் பெற ஆரம்பித்தான்.

 தொடரும்