சிறுகமணி லிங்கம்
தர்காலதில் பெண்களில் பலர் கல்வி,வேலை நிமித்தமாகப் பள்ளி, அலுவலகம், கடைவீதி போன்ற பல போது இடங்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் அவர்களுக்கு அதிகமான பாதுகாப்புச் சக்திகள் தேவைப்படுகின்றன. எதிர்காலத்தில் இத்தகைய பிரச்னைகளை பெண்கள் சமுதாயம் சந்திக்க வேண்டிவரும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த ரிஷிகள் அதற்கான பாதுகாப்பு பூஜைகளை அருளியுள்ளனர்.
இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரிகற்பகாம்பிகை வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்புச் சக்திகளை சிறப்பாக அருள வல்ல அம்பிகை. பல யுகங்களுக்கு முன்னரே மைத்ரேயி தேவியால் ஆராதிக்கப்பட்டவள்.
மைத்ரேயி தேவி அருளிய பூஜை முறை.
மைத்ரேயி தேவி அந்த யுக நியதிப்படி பூணூல் அணிந்து ஒரு கோடி முறை ஸ்ரீகாய்திரீ மந்திரம் ஜபித்து, ருத்ர,சமக,வேத மந்திரங்களை ஒரு லட்சம் தடவை ஓதி வழிபட்டாள். பின்னர் 12 லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்துத் தன் பூஜையை நிறைவு sஎய்து, அந்த பூஜா பலன்களை எல்லாம் தேவியிடம் அர்ப்பணித்து, இனி வரும் யுகங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்புச் சக்திகளை அருளும்படி தேவியை வேண்டினாள்.
தொடரும்